இம்பால்: நாட்டின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இன்று நடைபெறும் இரண்டாவது மற்றும் இறுதி கட்ட சட்டசபை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 67% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
நாட்டின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 60 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.அதன் தொடர்ச்சியாக இரண்டாவதுமற்றும் இறுதிக்கட்ட சட்டசபை தேர்தல் இன்று நடைபெறுகிறது.
இதில் ஐந்து மாவட்டங்களில் உள்ள 22 தொகுதிகளுக்கு ஈன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 67% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்று மாநில தலைமை தேர்தல் அலுவலர் விவேக்குமார் தேவாங்கன் தெரிவித்துள்ளார்.
98 வேட்பாளர்கள் களத்தில் உள்ள இந்த தேர்தலில் முதல்வர் இபோபி சிங் மற்றும் சமூக செயற்பட்டாளர் ஐரோம் ஷர்மிளா ஆகியோர் களத்தில் உள்ளார்கள்.