பஞ்சாப் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்தவர் சுட்டுக்கொலை

பஞ்சாப் எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். 

பஞ்சாப் எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். 

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள குர்ட்சாபூர் பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கான சர்வதேச எல்லைப் பகுதி உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் இன்று எல்லைப் பாதுகாப்பு வேலி வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது அவரை எல்லையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதனால் எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com