வேன் மீது லாரி மோதல்: 8 பேர் பலி

மேற்கு வங்க மாநிலம், பர்த்வான் மாவட்டத்தில் வேன் மீது லாரி மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு வங்க மாநிலம், பர்த்வான் மாவட்டத்தில் வேன் மீது லாரி மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக, போலீஸார் கூறியதாவது: ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, பர்த்வானிலிருந்து கல்னா துணைக் கோட்டத்துக்கு உள்பட்ட சமுத்திரகர் பகுதியை நோக்கி வேனில் 9 பேர் சென்று கொண்டிருந்தனர். பானாகர் அருகே வந்தபோது, உருளைக் கிழங்கு மூட்டைகளுடன் லாரி ஒன்று எதிரே வந்தது.
திடீரென அந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியது. இதில், வேனில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இருவர் காயமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் இருவரும் பர்த்வான் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com