மேற்கு வங்க மாநிலம், பர்த்வான் மாவட்டத்தில் வேன் மீது லாரி மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக, போலீஸார் கூறியதாவது: ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, பர்த்வானிலிருந்து கல்னா துணைக் கோட்டத்துக்கு உள்பட்ட சமுத்திரகர் பகுதியை நோக்கி வேனில் 9 பேர் சென்று கொண்டிருந்தனர். பானாகர் அருகே வந்தபோது, உருளைக் கிழங்கு மூட்டைகளுடன் லாரி ஒன்று எதிரே வந்தது.
திடீரென அந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியது. இதில், வேனில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இருவர் காயமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் இருவரும் பர்த்வான் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று போலீஸார் தெரிவித்தனர்.