ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் உள்ள புகழ்பெற்ற 'காப்பி டே' நிறுவன கிளையொன்றில், குளிர்சாதன பெட்டியில் கரப்பான் பூச்சி இருப்பதைப் படம் எடுக்க முயன்ற வாடிக்கையாளர் ஒருவரை, அந்நிறுவன பெண் ஊழியர் அறையும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் அர்பன் வெர்மா. சட்டக் கல்லூரி மாணவரான இவர் இந்த மாத துவக்கத்தில் ஜெய்ப்பூரில் உள்ள பிரபல 'காபி டே' கிளையொன்றுக்கு சென்றிருந்தார். அங்கே உள்ள குளிர்சாதன பெட்டியில் கரப்பான் பூச்சிகள் இரண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே தனது கையிலிருந்த அலைபேசி கேமராவினால் அதனை படம் எடுக்க முயன்றார்.
அப்பொழுது அங்கு வந்த அந்நிறுவன பெண் ஊழியர் ஒருவர் அர்பன் வெர்மாவை தன் கையிலுள்ள அலைபேசியால் படம் எடுத்ததுடன், நேராக அவரை நோக்கி வந்து திடீரென்று அறைகிறார். பின்னர் அவரை திட்டவும் செய்கிறார். தற்பொழுது இந்த விடீயோவானது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள 'காபி டே' நிறுவனம், நடந்த சம்பவத்தின் முழுமையான விரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் மற்றும் நிறுவன ஊழியர்களுடன் கலந்து ஆலோசனை செய்த பின்பு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லையென்று உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
வீடியோ: