தேசியக் கொடியை அவமதித்த சீன அதிகாரி நிபந்தனையற்ற மன்னிப்பு

தில்லி அருகே நொய்டாவில் இருக்கும் சீன செல்லிடப் பேசி நிறுவனத்தில் பணிபுரியும் சீன அதிகாரி ஒருவர் இந்திய தேசியக் கொடியை

நொய்டா: தில்லி அருகே நொய்டாவில் இருக்கும் சீன செல்லிடப் பேசி நிறுவனத்தில் பணிபுரியும் சீன அதிகாரி ஒருவர் இந்திய தேசியக் கொடியை அவமதித்ததைக் கண்டித்து தொழிலாளர்கள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த நிறுவனத்தைச் சேர்ந்த சீன அதிகாரி ஒருவர், இந்திய தேசிய கொடியை அவமதிக்கும் வகையில், அதை குப்பைத் தொட்டியில் வீசியதாகத் தெரிகிறது. இதைக் கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களுடன் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீன நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக தெரிவித்தனர். இதையடுத்து தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com