காந்தி புகைப்படம் இல்லாமல் ரூ.500 ரூபாய் நோட்டுகள்: அதிர்ச்சியில் மக்கள்

மத்தியப் பிரதேசத்தில் எஸ்பிஐ ஏடிஎம் ஒன்றில் எடுக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டில் காந்தி படம் இல்லாமல் இருந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காந்தி புகைப்படம் இல்லாமல் ரூ.500 ரூபாய் நோட்டுகள்: அதிர்ச்சியில் மக்கள்


போபால்: மத்தியப் பிரதேசத்தில் எஸ்பிஐ ஏடிஎம் ஒன்றில் எடுக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டில் காந்தி படம் இல்லாமல் இருந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு மொரினாவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுத்து எண்ணிப் பார்த்தவருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அவருக்கு வந்த நான்கு 500 ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கத்தில் சீரியல் எண்ணைத் தவிர வேறு எதுவும் பதிவாகவில்லை காந்தி படம் உட்பட.

மத்தியப்பிரதேசத்தில் மட்டும் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுபோல காந்தி படம் இல்லாமல் ரூபாய் நோட்டுகள் வந்த சம்பவம் 3 முறை நிகழ்ந்துள்ளது.

இது குறித்த உடனடியாக வங்கியின் அவசர எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளித்ததாகவும், புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆர்பிஐ இது குறித்து விசாரித்து பதில் அளிக்கும் என்று பதில் வந்திருப்பதாகவும் வாடிக்கையாளர் கூறியுள்ளார்.

மேலும், இதற்கு ஆர்பிஐ மட்டுமே பதில் அளிக்க முடியும் என்று தெரிய வந்துள்ளது. நான் செய்யாத தவறுக்கு, தற்போது ஆர்பிஐ வங்கிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com