நாட்டின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கும் தொழிலாளர்களுக்கு தலை வணங்குகிறேன்: மோடி

இன்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, எண்ணற்ற தொழிலாளர்களின் உறுதி, கடும் உழைப்புக்கு தலைவணங்குவதாக மோடி டிவிட்டரில் கூறியுள்ளார்.
நாட்டின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கும் தொழிலாளர்களுக்கு தலை வணங்குகிறேன்: மோடி


புது தில்லி: இன்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, எண்ணற்ற தொழிலாளர்களின் உறுதி, கடும் உழைப்புக்கு தலைவணங்குவதாக மோடி டிவிட்டரில் கூறியுள்ளார்.

மே 1ம் தேதி சர்வதேச உழைப்பாளர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் 'நாட்டின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கும் தொழிலாளர்களுக்கு தலை வணங்குகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்கள் உதயமான நாள் என்பதால் அம்மாநில மக்களுக்கும் பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை கூறியுள்ளார்.

மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், 'இன்று உழைப்பாளர் தினம், இன்றைய நாளில், நாட்டின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கும் எண்ணற்ற தொழிலாளர்களின் உறுதி மற்றும் கடும் உழைப்புக்கு தலை வணங்குகிறேன்' என பதிவு செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com