புது தில்லி: தில்லியில் உள்ள சர் கங்கா ராம் தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெள்ளிக்கிழமை வீடு திரும்பினார்.
இதுகுறித்து அந்த மருத்துவமனையின் தலைவர் டி.எஸ்.ராணா, செய்தியாளர்களிடம் கூறுகையில், "உணவு ஒவ்வாமை காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் சோனியா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் உடல்நலம் தேறியதால் வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்' என்றார்.
69 வயதாகும் சோனியாவுக்கு இதே மருத்துவமனையில் கடந்த ஆண்டு தோள்பட்டை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.