ஹரியானா: ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள சர்வோதயா மருத்துவமனைில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் குறித்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திடீர் தீ விபத்தில் அதிஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.