புது தில்லி: நீட் தேர்வின் போது, கேரள மாநிலம் கன்னூரில் மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்னது குறித்து விளக்கம் அளிக்குமாறு சிபிஎஸ்இ தலைவருக்கு மனித உரிமைகள் ஆனையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தில்லியில் உள்ள சிபிஎஸ்இ தலைவர் இது குறித்து 4 வார காலத்துக்குள் விரிவான விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தேர்வை நடத்திய அதிகாரிகளே சோதனையில் ஈடுபட்டதாக சிபிஎஸ்இ விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வின் போது, ஆடைக் கட்டுப்பாடு என்று கூறி, மாணவ, மாணவிகள் கடும் கெடுபிடிக்கு ஆளானார்கள். இதில் கேரள மாநிலம் கன்னூரில் ஒரு மாணவியின் உள்ளாடையை அகற்றுமாறு தேர்தல் அதிகாரிகள் கூறியிருந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.