புது தில்லி: தனது கிரிக்கெட் வாழ்க்கைப் பற்றிய சினிமா அடுத்த வாரம் வெளியாக உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை, முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சந்தித்துப் பேசினார்.
சிறுவனாக இருந்த சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் விளையாட்டில் நுழைந்து, இந்தியாவின் நட்சத்திர வீரராக மாறியது வரையிலான வாழ்க்கைப் போராட்டத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் மே 26ம் தேதி வெளியிடப்பட உள்ளது. திரைப்படம் வெளியாக ஒரு வாரம் இருக்கும் நிலையில், பிரதமர் மோடியை இன்று சச்சின் சந்தித்துப் பேசியுள்ளார்.
இது குறித்து சச்சின் தனது சமூக வளைதலத்தில், பிரதமர் மோடியுடனான தனது சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, விரைவில் வெளியாக உள்ள 'சச்சின் - எ பில்லியன் ட்ரீம்ஸ்' திரைப்படம் குறித்து பேசி, அவரிடம் வாழ்த்துப் பெற்றேன் என்று தெரிவித்துள்ளார்.