jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:48:25 AM
செவ்வாய்க்கிழமை
24 ஏப்ரல் 2018

24 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு இந்தியா

வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேட்டுக்கு வாய்ப்பில்லை: நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

By DIN  |   Published on : 20th May 2017 12:47 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் எந்த வகையிலும் முறைகேடு செய்ய இயலாது என்று நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மின்னணு இயந்திரங்களைப் பயன்படுத்தி வாக்குப் பதிவு நடத்துவதே நம்பகமானது என்றும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திர சோதனையின்போது பெரும்பாலான வாக்குகள் பாஜகவுக்குப் பதிவானதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து ஆம் ஆத்மி உள்பட பல எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே இருந்த வாக்குச் சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தின.
அண்மையில் நடந்து முடிந்த உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி மீதும் அக்கட்சிகள் சந்தேகம் எழுப்பின. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்த தேர்தல் ஆணையம், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்பதை நிரூபிக்கத் தயாரா? என்றும் எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுத்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு நாடாளுமன்ற நிலைக் குழு (சட்டத் துறை) அழைப்பாணை அனுப்பியிருந்தது.
அதன்படி, காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா தலைமையிலான நிலைக் குழு முன்பு துணை தேர்தல் ஆணையர்கள் உமேஷ் சின்ஹா, விஜய் தேவ் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை ஆஜராகினர். அப்போது அவர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம்:
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்தான் தேர்தல் நடைமுறையில் தற்போதைக்கு மிகவும் நம்பகமானவை. அவற்றை முறைகேடாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் சிறிதளவும் இல்லை. ஒரு தரப்புக்கு சாதகமான வகையில் அதில் திருத்தங்களை மேற்கொள்ளவே முடியாது.
வருங்காலங்களில் அனைத்து தேர்தல்களிலும் வாக்கு சரிபார்ப்பு இயந்திரங்களுடன் இணைக்கப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த உள்ளோம் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

O
P
E
N

புகைப்படங்கள்

ஷாலினி பாண்டே
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
குந்தி
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்

வீடியோக்கள்

இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
8 மாத குழந்தை கொன்ற தாய்
8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்