டேஹ்ராடூன்: கேதார்நாத் மலைப் பகுதியில் 7 மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை, 2013ம் ஆண்டு ஏற்பட்ட மிகக் கடுமையான வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுடையது என்று சந்தேகிக்கப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநில காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) கூறுகையில், பைரவ்நாத் கோயிலுக்கு பின்புறம் இந்த எலும்புக் கூடுங்கள் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இந்த எலும்புக் கூடுகளின் டிஎன்ஏ மாதிரிகள் எடுக்கப்பட்ட பிறகு, இவற்றுக்கு முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட உள்ளது.