இஸ்லாமாபாத்: இந்தியா தூக்கிலிட்ட அஜ்மல் கஸாப்பை விட மிகப்பெரிய பயங்கரவாதி குல்பூஷண் ஜாதவ் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய முஷாரப், பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷண் ஜாதவ், மும்பையில் தாக்குதலில் ஈடுபட்டு தூக்கில் போடப்பட்ட அஜ்மல் கஸாபை விட மிகப்பெரிய பயங்கரவாதி.
அஜ்மல் கஸாப் ஒரு சாதாரண போர் வீரர். ஆனால் ஜாதவோ பாகிஸ்தானில் பயங்கரவாதத்தைத் தூண்டி விட்டுள்ளார். சதிச் செய்து பலரைக் கொன்றுக் குவித்துள்ளார். எங்களது பாதுகாப்புக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு வேறு எந்த சக்தியாலும் உத்தரவிட முடியாது என்றும் தெரிவித்தார்.