எல்லையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர்கள் இருவர் வீர மரணமடைந்தனர்.

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர்கள் இருவர் வீர மரணமடைந்தனர். இறுதியில் பயங்கரவாதிகள் இருவரையும் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.
இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியதாவது: காஷ்மீர் மாநிலத்தின் நெளகாம் பகுதியில் அமைந்துள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்கள் வழக்கமான கண்காணிப்புப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களது முயற்சியைத் தடுத்த நிறுத்த பாதுகாப்புப் படையினர் முற்பட்டபோது, பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து
இந்தியத் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தச் சண்டையில் தீரத்துடன் போரிட்ட இரு இந்திய வீரர்கள் தங்களது இன்னுயிரை நீத்தனர். முடிவில் பயங்கரவாதிகள் இருவரையும் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இந்திய வீரர்களின் துணிச்சலான நடவடிக்கை காரணமாக ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com