புதுதில்லி: நல்லவர்கள் யார் வந்தாலும் பாஜக ஏற்றுக்கொள்ளும். அந்தவகையில், ரஜினிக்காக பாஜகதவுகள் திறந்தே இருக்கின்றன என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ந
தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. காஷ்மீரில் ஏற்பட்டுள்ள பிரச்னையை மோடி அரசு கட்டுப்படுத்தும்.
அரசியலுக்கு வருவது பற்றி ரஜினி தான் முடிவு செய்ய வேண்டும். நல்லவர்கள் யார் வந்தாலும் அவர்களை பாஜக ஏற்றுக் கொள்ளும். அந்த வகையில் ரஜினிக்காக பாஜக கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்தார்.
மேலும், மோடி அரசு மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. தங்கள் நலனுக்காக மத்திய அரசு பாடுபடுகிறது என்பதை ஏழை மக்கள் நம்புகின்றனர். ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்பே மிகப்பெரிய சான்றிதழ் என்று கூறினார்.