காஷ்மீர்: பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் அமைந்துள்ள தீவிரவாதிகளின் பதுங்கு குழிகள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காஷ்மீரின் ரஜோரி மற்றும் நவ்ஷேரா பகுதிகளை ஒட்டியுள்ள பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் அமைந்துள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் பதுங்கு குழிகள் மீது, இந்திய ராணுவம் அதிரடியாக துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது.
முன்னதாக காஷ்மீரின் நவ்காம் பகுதியில் நடந்த ஊடுருவல் முயற்சியில் நான்கு தீவிரவிதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் துவங்கியுள்ளது.
தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகளை தடுத்து நிறுத்தவே இந்த தாக்குதல் நடைபெறுகிறது என்று தில்லியில் ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.