ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சர்ச்சைக்குரிய சாமியார் சந்திராசாமி மரணம்!

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தொடர்புடையவர் என்று சர்ச்சைக்குரிய வகையில் குற்றம் சாட்டப்பட்ட சாமியார் சந்திராசாமி ...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சர்ச்சைக்குரிய சாமியார் சந்திராசாமி மரணம்!

புதுதில்லி: ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தொடர்புடையவர் என்று சர்ச்சைக்குரிய வகையில் குற்றம் சாட்டப்பட்ட சாமியார் சந்திராசாமி உடல்நலக் குறைவால் தில்லியில் இன்று காலமானார்

தில்லியைச் சேர்ந்த சாமியார் சந்திராசாமி. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய ஜெயின் கமிஷன் அறிக்கையில் தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டியவர் என்று குற்றம் சாட்டப்பட்டவர் சந்திராசாமி. இவர் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோருடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர்.

சிறுநீரக செயலிழப்பால் அவதிப்பட்டு வந்த சந்திராசாமி இன்று டெல்லி மருத்துவமனை ஒன்றில் மாரடைப்பால் காலமானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com