ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் தப்பினார் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்.
மகாராஷ்டிர மாநிலம், லத்தூர் என்ற இடத்தில் முதல்வர் பயணம் செய்த ஹெலிகாப்டர் இன்று திடீரென விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே விபத்தை உறுதி செய்த முதல்வர் பட்னாவிஸ் தான் பாதுகாப்புடன் இருப்பதாக டிவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.