ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம், ராம்பூரில் பதுங்கியிருந்த 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ராம்பூர் செக்டர் பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை, இந்திய பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும் அப்பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளைப் பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.