அகமதுநகர்: மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் - மன்மத் நெடுஞ்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
சாலையில் உள்ள நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். மேலும் தகவல்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.