தினகரன், மல்லிகார்ஜுனா ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை 29-க்கு ஒத்திவைப்பு

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறி தில்லி காவல் துறை தொடுத்துள்ள வழக்கில் நீதிமன்ற
தினகரன், மல்லிகார்ஜுனா ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை 29-க்கு ஒத்திவைப்பு

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறி தில்லி காவல் துறை தொடுத்துள்ள வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ள அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு (மே 29) தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் தில்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற சிறப்பு நீதிபதி பூணம் சௌத்ரி முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல் துறை குற்றப் பிரிவு சார்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்த வழக்கை விசாரித்து வரும் காவல் துணைக் கண்காணிப்பாளர் சஞ்சய் ஷெராவத் நீதிமன்றத்தில் ஆஜராக இயலவில்லை. ஆகவே, இந்த மனுக்கள் மீதான விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதை ஏற்றுக் கொண்ட சிறப்பு நீதிபதி பூணம் சௌத்ரி, மனுக்கள் மீதான விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு (மே 29) ஒத்திவைத்தார்.
சுகேஷ் மனுவின் நிலை: இந்த வழக்கில் முதலாவதாக கைது செய்யப்பட்ட பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவரது சார்பில் ஏற்கெனவே தில்லி நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதை கடந்த வாரம் விசாரித்த சிறப்பு நீதிபதி பூணம் சௌத்ரியிடம் இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளதாகவும் சுகேஷை ஜாமீனில் விடுவித்தால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என்றும் காவல் துறை சார்பில் முறையிடப்பட்டது. இதை ஏற்று சுகேஷின் மனுவை சிறப்பு நீதிபதி பூணம் சௌத்ரி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com