இரட்டை இலை விவகாரம்: டிடிவி தினகரனின் காவல் ஜூன் 12 வரை நீட்டிப்பு

டிடிவி தினகரனின் காவலை ஜூன் 12-ம் தேதி வரை நீட்டித்து தில்லி  நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.  
இரட்டை இலை விவகாரம்: டிடிவி தினகரனின் காவல் ஜூன் 12 வரை நீட்டிப்பு

புது தில்லி: டிடிவி தினகரனின் காவலை ஜூன் 12-ம் தேதி வரை நீட்டித்து தில்லி  நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.  

இரட்டை இலை சின்னத்தை சசிகலா தலைமையிலான அதிமுகவுக்கு சாதகமாகப் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் சுகேஷ் சந்திரசேகர், மல்லிகார்ஜுனா, நரேஷ் (எ) நாது சிங், பாபு பாய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா கட்சி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், ஜாமீன் கேட்டு தில்லி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தினகரன் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்று மனு மீதான விசாரணையை ஜூன் 12-ம் தேதிக்கு நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com