இறந்து போன தாயின் உடலுடன் நான்கு நாட்கள் தனியாக இருந்த வாலிபர்!

தாய் இறந்து விட்ட விபரம் தெரியாமல் இறந்து போன தாயின் உடலுடன் நான்கு நாட்கள் மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் தனியாக இருந்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது
இறந்து போன தாயின் உடலுடன் நான்கு நாட்கள் தனியாக இருந்த வாலிபர்!

கொல்கத்தா: தாய் இறந்து விட்ட விபரம் தெரியாமல் இறந்து போன தாயின் உடலுடன் நான்கு நாட்கள் மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் தனியாக இருந்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது

கொல்கத்தாவின் வடக்குப்பகுதியில் உள்ள பைக்கப்பரா என்னும் இடத்தில் அரசுக் குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் மிரா பாசு (67). அவருடன் அவரது மகனான அனிர்பன் பாசுவும் வசித்து வருகிறார். அவர் மனநிலை சரியில்லாதவர் என்று கூரப்பப்டுகிறது.

இந்நிலையில் இன்று அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பக்கத்து வீட்டினர் கூறியதால் காவல்துறையினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது அங்கே மிரா பாசு இறந்து கிடந்தது தெரிய வந்தது. ஆனால் அவரது தாய் இறந்தது தெரியாமல், அதே வீட்டின் மற்றொரு அறையில் அவரது மகன் அனிர்பன் பாசு அடைக்கப்பட்டிருந்தார்.

சடலத்தின் நிலையை பார்த்த பொழுது மிரா இறந்து மூன்று அல்லது நான்கு நாட்கள் இருப்பது போன்று காணப்பட்டது. பொதுவாகவே அனிர்பன் பசுவை அவரது தாயார் அறையில் அடைத்து வைத்திருப்பதன் காரணமாக அவருக்கு தாயார் இறந்த விஷயம் தெரியவில்லை.

அதேபோல் அவர்கள் இருவருமே அவ்வளவாக வெளியுலகத் தொடர்பு இல்லாதவர்கள் என்பதால் உடனடியாக இந்த சம்பவம் குறித்து வெளி உலகத்திற்கு தெரியவில்லை.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com