மேற்கு வங்கத்தின் கோலாபரி மாவட்டத்தில் ரூ.9 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்கு வங்க மாநிலத்தின் கோலாபரி என்ற மாவட்டத்தில் தேசியப் புலனாய்வு முகமை மற்றும் மாவட்ட காவல்துறை இணைந்து திடீர் சோதனையில் ஈடுபட்டது.
அப்போது ரூ.9 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. கைப்பற்றப்பட்ட ரூபாய் தொடர்பாக வருமானவரித்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.