பிரிட்டனில் பெண் பலாத்காரம்: இந்தியருக்கு 7 ஆண்டு சிறை

பிரிட்டனில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், இந்தியருக்கு 7 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரிட்டனில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், இந்தியருக்கு 7 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விதிங்டனைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர், தனது நண்பரின் வீட்டுக்கு கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி சென்றபோது அங்குள்ள கடையில் தனது செல்லிடப்பேசியை சார்ஜ் செய்ய சென்றுள்ளார். அந்தக் கடையில் பணியாற்றிய நாகபுரியைச் சேர்ந்த ஸ்வப்னில் குலாத் என்பவர், பெண்ணை கடுமையாக தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து, குலாத்தை கிரேட் மான்செஸ்டர் நகர போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை, மான்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்றது. 
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து நீதிமன்றம் தனது தீர்ப்பை அளித்துள்ளது. அந்தத் தீர்ப்பில், குலாத்துக்கு 7 ஆண்டு மற்றும் 8 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com