குஜராத்: 57 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

குஜராத் மாநிலத்தில் 57 ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் 4 மாநில காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் 57 ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் 4 மாநில காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.
அந்த மாநில உள்துறைப் பிரிவு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் இந்தப் பணியிடமாற்றங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காந்திநகர் காவல்துறை ஆயுதப் படைப் பிரிவுத் தலைவர் பிரமோத் குமார், காலியாக உள்ள ஆமதாபாத் ஊர்க்காவல் படைப் பிரிவுத் தலைவராக நியமிக்கப்படுகிறார். எனினும், காவல்துறை ஆயுதப் படைப் பிரிவுத் தலைவர் பொறுப்பையும் அவர் கூடுதலாக தொடர்ந்து வகிப்பார்.
தற்போது வன்கொடுமைத் தடுப்புப் பிரிவு கூடுதல் துணைத் தலைவராக இருக்கும் வினோத் மால், காவல்துறை சீர்திருத்தப் பிரிவு கூடுதல் துணைத் தலைவராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாநில குற்றப் பதிவுப் பிரிவுத் கூடுதல் துணைத் தலைவர் சஞ்சய் ஸ்ரீவஸ்தவா, தொழில்நுட்ப சாதனங்கள் பிரிவு கூடுதல் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு 57 ஐ.பி.எஸ். அதிகாரிகளும், 4 உயரதிகாரிகளும் வேறு பிரிவுகளுக்கும், இடங்களுக்கும் மாற்றல் செய்யப்பட்டுள்ளனர்.
இன்னும் சில மாதங்களில் குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com