மின்னல் தாக்கியதில் 6 பேர் பலி

கர்நாடக மாநிலம், ஹாசன் அருகே மழைக்கு கோயிலில் தஞ்சமடைந்தவர்கள் மீது மின்னல் பாய்ந்ததில், 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

கர்நாடக மாநிலம், ஹாசன் அருகே மழைக்கு கோயிலில் தஞ்சமடைந்தவர்கள் மீது மின்னல் பாய்ந்ததில், 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
ஹாசன் அருகே உள்ள ஹுனுசுவாடி கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் வியாழக்கிழமை காலை கால்நடைகளை மேய்ச்சலுக்காக அங்குள்ள வனப் பகுதிக்கு ஓட்டிச் சென்றனர். அப்போது, பலத்த மழை பெய்ததால் நந்தினாதபுராவிலிருந்த கோயில் வளாகத்துக்குள் நின்றிருந்தனர்.
அப்போது, அவர்கள் மீது மின்னல் பாய்ந்ததில் புட்டண்ணா (65), ஸ்ரஜயா (18), சுதீப் (19), சுவர்ணம்மா (45), திம்மே கெளடா (60) உள்பட 6 பேர் நிகழ்விடத்திலே உயிரிழந்தனர். காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
இதுகுறித்து நாளே காவல் நிலையப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com