பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு

தற்போது பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிக்கும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் வாகனம் அல்லாத எதிலும் பெட்ரோல் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பங்குகளில் இருந்து வாகனம் வைத்திருப்போர் இதர பொருட்களில் பெட்ரோல் அல்லது டீசல் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம், வீடுகளுக்கு நேரடியாகச் சென்று பெட்ரோல், டீசல் விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

அக்டோபர் 13-ந் தேதி நாடு தழுவிய அளவில் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. இதில், நாடு முழுவதும் உள்ள சுமார் 54,000 பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் கலந்துகொள்ளப்போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com