வாடிக்கையாளர்களுக்கு ஜியோவின் 'தீபாவளி ஸ்பெஷல்' என்ன தெரியுமா?

தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் வாரத்தில் ரூ.399க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 'ஜியோ தீபாவளி தன் தனா தன்' என்ற சிறப்புச் சலுகை திட்டத்தினை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு ஜியோவின் 'தீபாவளி ஸ்பெஷல்' என்ன தெரியுமா?

மும்பை: தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் வாரத்தில் ரூ.399க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 'ஜியோ தீபாவளி தன் தனா தன்' என்ற சிறப்புச் சலுகை திட்டத்தினை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 18-ஆம் தேதியன்று தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் அதனை முன்னிட்டு வாடிகையாளர்களுக்கு சிறப்புச் சலுகை திட்டத்தினை ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 'ஜியோ தீபாவளி தன் தனா தன்'  என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் படி, மூன்று மாதங்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு அளவில்லா அழைப்புகள் மற்றும் டேட்டாவினை வழங்கும் ரூ.399 திட்டத்தின் கீழ், இன்று துவங்கி வரும் 18-ஆம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, முழுமையாக பணம் திரும்பப் பெறும்படியான 'கேஷ் பேக்' அளிக்கப்பட உள்ளது.

இந்த 'கேஷ் பேக்' திட்டமானது ரூ.400 என்ற அளவில் இருக்கும். அதுவும் ரூ.50 மதிப்புள்ள எட்டு கூப்பன்களாக வழங்கப்படும். அதனை அவர்கள் எதிர்காலத்தில் ரூ.309-.க்கு மேலான திட்ட ரீசார்ஜுகளிலும், ரூ.91-க்கு மேலான 'டேட்டா ரீசார்ஜுகளிலும்' பயன்படுத்திக் கொள்ளலாம். அனால் ஒரு நேரத்தில் ஒரு கூப்பனைத்தான் பயன்படுத்த முடியும்.           

அநேகமாக அக்டோபர் 19-ஆம் தேதியன்று கட்டண விகிதங்களில் மாற்றங்கள் அறிவிக்கப்ப்படுமென்றும், ஆனால் மேலே குறிப்பிட்ட இந்த ஒரு வார காலத்தில் ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தவர்களுக்கு சலுகைகளில் எதுவும் மாற்றமிருக்காது எனவும் நிறுவன வட்டங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com