நவம்பர் 9-இல் ஹிமாச்சல் சட்டப்பேரவை தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு! 

வரும் நவம்பர் 9-ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நவம்பர் 9-இல் ஹிமாச்சல் சட்டப்பேரவை தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு! 

புதுதில்லி: வரும் நவம்பர் 9-ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவைகளின் ஆயுள் காலம் வரும் ஜனவரி மாதத்துடன் முடிவடைவதால், தில்லியில் இன்று தேர்தல் ஆணையம் இரு மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை அறிவிக்கும் என்று கூறப்பட்டது.

அதன்படி தலைமை தேர்தல் ஆணையர் அக்ஸல் குமார் ஜோதி மற்ற இரு தேர்தல் ஆணையர்களுடன் செய்தியாளர்களை இன்று மாலை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

ஹிமாச்சல் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் நவம்பர் 9-ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறும். தேர்தல் அட்டவனை பின்வருமாறு:

தேர்தல் தேதி அறிவிப்பு: அக்டோபர் 16, 2017

வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய கடைசித் தேதி: அக்டோபர் 23, 2017

வேட்பு மனுக்கள் பரிசீலனை: அக்டோபர் 24, 2017

வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள்: அக்டோபர் 26, 2017 

வாக்குப் பதிவு: நவம்பர் 9, 2017

வாக்கு எண்ணிக்கை: டிசம்பர் 18, 2017 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதினைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், அந்த அறிவிப்பு வரும் திங்கள்கிழமை (16.10.17) வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com