காஷ்மீரில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் நிலவுகிறது.
பாகிஸ்தான், கடந்த சில நாள்களாக இந்தியப் பகுதிக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் இருக்கும் நிலையிலும், பாகிஸ்தான் அதை மீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் அருகே கே.ஜி. பகுதியில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே சண்டை நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.