கேரளாவில் நடைபெறும் முழு அடைப்பு காரணமாக பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, கேரளாவில் காங்கிரஸ் கட்சி இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி இன்று காலை முதலே கேரளாவில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் அனைத்தும் மாநில எல்லையான களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும் முழு அடைப்பையொட்டி கேரளாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.