மகாராஷ்டிர மாநிலம், ஜல்காவன் மாவட்டத்தில் நேரிட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
சாலிஸ்காவன் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் வேனும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயமடைந்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் விபத்துக்குள்ளான கார் மீது எதிர்பாராதவிதமாக மோதி உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தில் உயிரிழந்த 6 பேரும் சாலிஸ்காவன் அருகே உள்ள பொதேர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் காரில் ஒளரங்காபாத் நகருக்குச் சென்றுகொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீஸார்
தெரிவித்தனர்.