சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உள்பட 7 பேர் பலி

ராஷ்டிர மாநிலம், ஜல்காவன் மாவட்டத்தில் நேரிட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

மகாராஷ்டிர மாநிலம், ஜல்காவன் மாவட்டத்தில் நேரிட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
சாலிஸ்காவன் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் வேனும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயமடைந்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் விபத்துக்குள்ளான கார் மீது எதிர்பாராதவிதமாக மோதி உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தில் உயிரிழந்த 6 பேரும் சாலிஸ்காவன் அருகே உள்ள பொதேர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் காரில் ஒளரங்காபாத் நகருக்குச் சென்றுகொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீஸார் 
தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com