ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம், டிரால் மாவட்டத்தில் 2 பெண்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு பெண் பலியானார். ஒருவர் காயமடைந்தார்.
தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்று காலை குடியிருப்பு பகுதிகளில் நுழைந்த பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் ஹோன்மோ பகுதியைச் சேர்ந்த யாஸ்மீனா என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். டிரால் பகுதியைச் சேர்ந்த ரூபி என்ற மற்றொரு பெண் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து பயங்கரவாதிகளை பிடிப்பதற்காக போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதி முழுவதும் போலீஸாரின் கட்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.