இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
மேலும், 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நவம்பர் 22, 26, 29 தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 1-ந் தேதி நடைபெறும்.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 16 மாநகராட்சி, 198 நகராட்சி மற்றும் 439 கிராமப்புற பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் தற்போது நடைபெறவுள்ளது.
இதில், பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.