காஷ்மீருக்கு கூடுதல் தன்னாட்சி கேட்ட ப.சிதரம்பத்துக்கு நரேந்திர மோடி கண்டனம்!

காஷ்மீருக்கு கூடுதல் தன்னாட்சி வழங்கே வேண்டும் என கூறிய முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்துக்கு
காஷ்மீருக்கு கூடுதல் தன்னாட்சி கேட்ட ப.சிதரம்பத்துக்கு நரேந்திர மோடி கண்டனம்!

பெங்களூரு: காஷ்மீருக்கு கூடுதல் தன்னாட்சி வழங்கே வேண்டும் என கூறிய முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். 

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று சனிக்கிழமை செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் பேசுகையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும். அதே வேலையில் அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவின்படி காஷ்மீருக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். 

ப.சிதம்பரத்தின் கருத்துக்கு பாஜக தலைவர்கள் அருண்ஜேட்லி, ஸ்மிருதி இரானி, சுப்பரமணிய சுவாமி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி சிதம்பரத்தின் கருத்தை வரவேற்றுள்ளது. 

இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சிதம்பரத்தின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

காஷ்மீர் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்து வரும் கருத்துக்கு அக்கட்சி பதில் அளிக்க வேண்டும். காஷ்மீருக்கு கூடுதல் தன்னாட்சி வழங்க வேண்டும் என்கிற காங்கிரஸ் தலைவர்களின் கருத்தை ஏற்க முடியாது. மக்கள் எதிர்பார்க்கவில்லை. நாட்டின் பிரதான் கட்சியான காங்கிரஸ் கட்சியிடம் இருந்து இப்படியொரு கருத்தை நாட்டு மக்கள் எதிர்பார்க்கவில்லை.

காஷ்மீருக்கு தன்னாட்சி தேவை என காங்கிரஸ் தலைவர்கள் பேசுவது என்பது நமது துணிச்சலான ராணுவ வீரர்களை அவமதிப்பதாகும். மக்களுக்கு எதிரானது. ராணுவத்தினரின் தியாகத்தின் மீது அரசியலைச் செய்யும் மக்கள் நாட்டின் நலனுக்காக பங்களிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

"முன்னாள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் இப்பொழுது இதுபோன்ற திடீர் திருப்பத்திற்கான அறிக்கைகளை கையில் எடுத்துக் கொள்கிறார்கள், அவர்களின் அத்தகைய அறிக்கை போர்களை வெட்கமின்றி செய்கிறார்கள்" என்று கூறினார்.

நாட்டு மக்களின் உணர்வுக்கு விரோதமானதாக காங்கிரஸ் இருந்து வருகிறது. "தொடர்ச்சியான தோல்விக்குப் பிறகு, காங்கிரஸில் உள்ள விவேகமானவர்கள் சரியான பாதையில் அதை கொண்டு வர முயற்சிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால், நாம் அவர்களிடமிருந்து ஏமாற்றத்தையும், பொறுப்பற்ற நடத்தையைத் தான் பார்க்கவும் கேட்கவும் முடிகிறது," என்றும் காங்கிரஸ் கட்சி அதன் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளப் போவதில்லை என்று மேலும் தெரிவித்தார். 

டோக்லாம் விவகாரத்தின் போது காங்கிரஸ் கட்சியினர் பொய்யான தகவல்களை பரப்பிவிட்டனர். டோக்லாம் விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை முழு உலகமும் கண்டது. சீனா எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருந்தாலும், தனது திறமை, விடாமுயற்சி மற்றும் நிலைத்தன்மையும் டோக்லாமில் வெளிப்படுத்தியது இந்தியா என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com