கொச்சி விமான நிலையத்தில் ஏர்இந்தியா விமானம் விபத்து

அபுதாபியில் இருந்து கொச்சி வந்த ஏர் இந்தியா விமானம் கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கிய போது எதிர்ப்பாராத விதமாக விமானம்
 கொச்சி விமான நிலையத்தில் ஏர்இந்தியா விமானம் விபத்து

கொச்சி: அபுதாபியில் இருந்து கொச்சி வந்த ஏர் இந்தியா விமானம் கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கிய போது எதிர்ப்பாராத விதமாக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர்.

அபுதாபியில் இருந்து அதிகாலை 2.40 மணியளவில் 102 பயணிகளுடன் கொச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX452 விமானம், விமான நிலையத்தில் தரையிறங்கி வாகன நிறுத்துமிடம் நெருங்கி கொண்டிருந்தபோது எதிர்ப்பாராத விதமாக விமானம் விபத்துக்குள்ளானது.

இதில், விமானத்தில் பயணம் செய்த 102 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக பத்திரமாக மீட்கப்பட்ட்டு வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த

விபத்துக்கான காரணம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com