பயங்கரவாதிகள் ஊடுருவல்: பாக். தூதரிடம் இந்தியா கண்டனம்

இந்தியாவுக்கான பாகிஸ்தானின் தாற்காலிக (பொறுப்பு) தூதர் ஹைதர் ஷாவை நேரில் அழைத்து, எல்லையில் கடந்த மாதம் பயங்கரவாதிகள் ஊடுருவி நடத்திய தாக்குதல்களுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்தியாவுக்கான பாகிஸ்தானின் தாற்காலிக (பொறுப்பு) தூதர் ஹைதர் ஷாவை நேரில் அழைத்து, எல்லையில் கடந்த மாதம் பயங்கரவாதிகள் ஊடுருவி நடத்திய தாக்குதல்களுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் 26-ஆம் தேதி ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் எல்லை வழியாக ஊடுருவி நடத்தியத் தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் ஹைதர் ஷாவிடம் பாகிஸ்தான் அரசுக்கு தெரிவிக்குமாறு சில ஆலோசனைகளுடன் கூடிய கடிதம் ஒன்றும் வெளியுறவு அமைச்சகம் அளித்தது.
இதுதொடர்பாக அந்த அமைச்சகம் தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
புல்வாமா தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று ஹைதர் ஷாவிடம் வலியுறுத்தப்பட்டது. அந்தத் தாக்குதலில் ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் டிஎன்ஏ மாதிரிகளை அளிக்கவும் தயாராக இருப்பதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் மண்ணிலிருந்து இயங்கிவரும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு கடந்த மாதம் 16-ஆம் தேதி நள்ளிரவில் புல்வாமா மாவட்டத்தில் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கும் அவரிடம் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com