21-ஆவது ஜிஎஸ்டி கூட்டம் நாளை நடைபெறுகிறது

21-ஆவது ஜிஎஸ்டி கௌன்சில் பொதுக்கூட்டம் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் ஐதராபாத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
21-ஆவது ஜிஎஸ்டி கூட்டம் நாளை நடைபெறுகிறது

நாடு முழுவதும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ந் தேதி சரக்கு மற்றும் சேவை மீதான பொது வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. இதனால், மறைமுக வரிகளில் இருந்து விலக்கு ஏற்பட்டது.

மேலும், பொருட்களின் மீதான நேரடி வரி விதிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இதையடுத்து, ஜிஎஸ்டி கௌன்சில் அமைக்கப்பட்டது. சரக்கு மற்றும் சேவை வரி மீதான பொதுக்கூட்டம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 21-ஆவது ஜிஎஸ்டி கௌன்சில் பொதுக்கூட்டம் நிதிமயமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் ஐதராபாத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தின் போது தெலுங்கானா மாநில நிதியமைச்சர் பிரதிநிதியாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com