எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த ரூபாய் நாணயங்கள்: மத்திய நிதித்துறையின் அரசாணை

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.-ன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த ரூபாய் நாணயங்கள் வெளியிடப்படும் என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த ரூபாய் நாணயங்கள்: மத்திய நிதித்துறையின் அரசாணை


புது தில்லி: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.-ன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த ரூபாய் நாணயங்கள் வெளியிடப்படும் என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அச்சடிக்கப்பட்டு வெளியிடப்படும் ரூ.100 மற்றும் ரூ.5 ஆகிய நாணயங்களின் பின்புறத்தில் எம்.ஜி.ஆர்-ன் உருவம் இடம்பெற்றிருக்கும் என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக எம்.ஜி.ஆர். உருவம் பொறித்த நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளதாக கடந்த ஜூன் மாதம், தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.

இது தொடர்பாக ஜூலை மாதம் அவர் வெளியிட்ட அறிக்கையில், எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் வெளியிட வேண்டும் என்று நான் முதல்வராக இருந்தபோது மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் ஜனவரி 5-இல் கடிதம் அனுப்பியிருந்தேன்.

எனது வேண்டுகோளை ஏற்று, எம்ஜிஆரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் ஜூலை 17-இல் கடிதம் அனுப்பியுள்ளது. தமிழக மக்களின் நெஞ்சில் நீக்கமற நிறைந்திருக்கும் எம்ஜிஆரின் நாணயம் வெளியிடும் பிரதமர் நரேந்திர மோடிக்கும், அவர் தலைமையிலான மத்திய அரசுக்கும் நன்றி என்று கூறியிருந்தார்.

இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் மத்திய நிதித்துறை அமைச்சகம் இன்று அரசாணை பிறப்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com