கர்நாடக மாநிலத்தில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 9 பேர் பலியாகினர்.
கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மங்களூரில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். இந்த கார் எல்லாபூர் பகுதியை கடந்த போது திடீரென எதிரே வந்த லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.