தில்லியில் ராஜ்தானி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
ஜம்மு-தில்லி ராஜ்தானி விரைவு ரயில் இன்று காலை தில்லி ரயில் நிலையம் வந்து நின்றபோது அதன் கடைசிப் பெட்டி திடீரென தடம்புரண்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயமில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் விபத்துக்கான காரணம் தெரியப்படவில்லை. அண்மை காலமாக ரயில் விபத்து தொடர்ந்து காணப்படுவதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.