அகமதாபாத்-மும்பை இடையேயான புல்லட் ரயில் திட்டப் பணிக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் பிரதமர் மோடியுடன் இணைந்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் அடிக்கல் நாட்டினார். நாட்டில் முதன்முறையாக புல்லட் ரயில் திட்டம் அகமதாபாத்-மும்பை இடையே ரூ. 1. 10 லட்சம் கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டம் 598 கி.மீ. தூரத்தில் 468 கி.மீ. தூரம் உயர்மட்ட பாதையாகவும் 27 கி.மீ. தூரம் சுரங்கப் பாதையாகவும் 13 கி.மீ. தூரம் தரையிலும் பாதை அமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.