புல்லட் ரயில் திட்டப் பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல்

அகமதாபாத்-மும்பை இடையேயான புல்லட் ரயில் திட்டப் பணிக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
புல்லட் ரயில் திட்டப் பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல்

அகமதாபாத்-மும்பை இடையேயான புல்லட் ரயில் திட்டப் பணிக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் பிரதமர் மோடியுடன் இணைந்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் அடிக்கல் நாட்டினார். நாட்டில் முதன்முறையாக புல்லட் ரயில் திட்டம் அகமதாபாத்-மும்பை இடையே ரூ. 1. 10 லட்சம் கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது. 

இத்திட்டம் 598 கி.மீ. தூரத்தில் 468 கி.மீ. தூரம் உயர்மட்ட பாதையாகவும் 27 கி.மீ. தூரம் சுரங்கப் பாதையாகவும் 13 கி.மீ. தூரம் தரையிலும் பாதை அமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com