ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமம் இணைப்பு: மத்திய அரசின் அடுத்த திட்டம்

ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்களை வைத்திருப்பதை தடை செய்யும் வகையில், ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமத்தை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமம் இணைப்பு: மத்திய அரசின் அடுத்த திட்டம்

புது தில்லி: ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்களை வைத்திருப்பதை தடை செய்யும் வகையில், ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமத்தை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய சட்டம், நீதித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் இந்த தகவலைத் தெரிவித்தார்.

சட்டத்துக்குப் புறம்பாக தற்போது பலரும், ஒன்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்களை வைத்துள்ளனர். விதிகளை மீறும் போது ஒரு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டால் மற்றொன்றைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். போலி பெயர்களிலும் ஓட்டுநர் உரிமங்கள் வாங்கிக் கொள்கிறார்கள்.

'டிஜிட்டல் ஹரியாணா மாநாடு 2017' விழாவில் கலந்து கொண்டு பேசிய ரவி ஷங்கர் பிரசாத், ஆதார் என்பது டிஜிட்டல் அடையாள அட்டையே தவிர, ஃபிசிகல் அடையாள அட்டையல்ல. ஃபிசிகல் அடையாளத்தை டிஜிட்டல் அடையாள அடடை மூலம் உறுதி செய்து கொள்ளலாம். பண மோசடிகளில் ஈடுபடுவதைத் தடுக்கவே பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது என்று தெரிவித்தார்.

இந்தியாவில் இதுவரை 18 கோடிக்கும் அதிகமான ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

ஏற்கனவே, மத்திய அரசின் பல நலத் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. செல்போன் எண்ணுடன் ஆதார் இணைப்பு மற்றும் பான் எண்ணுடன் ஆதார் இணைப்புப் பணிகளும் நடந்த வருகின்றன. இந்த நிலையில், ஓட்டுநர் உரிமத்தோடு ஆதார் எண் இணைப்பு குறித்த அறிவிப்பையும் விரைவில் எதிர்பார்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com