மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் குழு இன்று காஷ்மீர் பயணம்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் குழு சனிக்கிழமை ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்குப் பயணம் மேற்கொள்கிறது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் குழு சனிக்கிழமை ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்குப் பயணம் மேற்கொள்கிறது.
காஷ்மீரில் இப்போது நிலவி வரும் சூழ்நிலை குறித்து ஆய்வு செய்யும் இக்குழுவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் அம்பிகா சோனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் காஷ்மீரில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், தொழிற்சங்கத்தினர், சமூக அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரைச் சந்தித்துப் பேச இருக்கின்றனர். முன்னதாக கடந் த 10, 11-ஆம் தேதிகளில் காங்கிரஸ் குழுவினர் ஜம்முவில் இதேபோன்ற பயணத்தை மேற்கொண்டனர். இப்போது ஸ்ரீநகருக்குச் செல்கின்றனர். அடுத்த கட்டமாக லடாக் பகுதிக்கும் இவர்கள் செல்வார்கள் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலின் போது பெரும் வன்முறை வெடித்தது.
அப்போது, காஷ்மீரில் உள்ள சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்ய இக்குழுவை காங்கிரஸ் அமைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com