கார்த்தி சிதம்பரத்துக்கு நெஞ்சு வலி

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், தொழிலதிபருமான கார்த்தி சிதம்பரத்துக்கு சனிக்கிழமை காலை திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், தொழிலதிபருமான கார்த்தி சிதம்பரத்துக்கு சனிக்கிழமை காலை திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தில் உள்ள பொல்லிபேட்டாவில் கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான காபி தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தைப் பார்வையிடுவதற்காக, கார்த்தி சிதம்பரம் இரண்டு நாள்களுக்கு முன் அங்கு வந்திருந்தார். இந்நிலையில், சனிக்கிழமை காலை லேசான தலைசுற்றலுடன் நெஞ்சுவலி வந்ததை அடுத்து, விராஜ்பேட்டில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சோர்வாகக் காணப்பட்ட கார்த்தி சிதம்பரத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்த பிறகு அவர் சென்னை திரும்பினார்.
ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில், கார்த்தி சிதம்பரம் விசாரணையை எதிர்கொண்டுள்ள நிலையில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com