பயந்தர் (மகாராஷ்டிரா): தான் பெற்ற மகன் பிற பெண்களிடம் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால், அவனது தாயே அவனை கூலிப்படை வைத்துக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் பயந்தர் பகுதியை சேர்ந்தவர் ராம்சரண் ராம்தாஸ் (21). இவர் சிறு வயதிலிருந்து போதை பழக்கத்துக்கு அடிமையானவராக இருந்துள்ளார். அத்துடன் பெண்களிடம் பாலியல் சீண்டல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
அதன் உச்சகட்டமாக தனது உறவினர்கள் உட்பட 12 பெண்களை ராம்சரண் பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடுமை நிகழ்ந்துள்ளது.
இவரது செயல்களால் வேதனைக்கு உள்ளான அவரது தாய், அவரைத் திருத்தவும் முயன்றுள்ளார், ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. மேலும் அவரது பெற்ற தாய் மற்றும் வளர்ப்பு தாய் ஆகிய இருவரையும் கூட ராம்சரண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.
இதனால் அவர் மேல் வெறுப்படைந்த அவரது தாய், இத்தகைய ஒருவனை மகனாக நினைப்பதை விட , அவனைக் கொல்வதே மேல் என்று முடிவு செய்துள்ளார். அதன்படி அவரைக் கொல்ல முடிவு செய்து கூலிப்படை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். கூலிப்படைக்கு முன்பணமாக ரூ.50 ஆயிரம் பணமும் கொடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து கூலிப்பயைச் சேர்ந்தவர்கள் ராம்சரணை தனியாக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரது கழுத்தை அறுத்து கொன்றனர்.இதுகுறித்து தகவலறிந்த விரைந்து வந்த விசாரனை நடத்திய பயந்தர் போலீசார், ராம்சரணின் தாய் மற்றும் கூலிப்படையினர் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.