சென்னை: மும்பையில் கனமழை பெய்து வருவதை அடுத்து விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக விமான நிலையத்தில் உள்ள ஒடு பாதைகள் சரிவர தெரியாததாலா மும்பையில் இருந்து விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வரவேண்டிய விமானஙகள் வேறு வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.
மேலும் மும்பை செல்ல இருந்த விமானங்களும், மும்பையில் கனமழை காரணமாக 10 விமானங்களும் சென்னையில் தரையிறைக்கப்பட்டன. கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்தில் பிரதான ஓடுதளம் மூடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் மத்திய ரயில்வே மூலம் இயக்கப்படும் அனைத்துரயில்களும் வழக்கம் போல் இயங்குகின்றன. ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சமூக வலை தளங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.