சென்னை: வழக்கு குறித்த கோரிக்கைகளை முன் வைக்க மூத்த வழக்குரைஞர்கள் ஆஜராகக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கட்டுப்பாடு விதித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியதாவது, வழக்குப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட வழக்குரைஞர்கள் மட்டுமே நீதிபதிகள் அமர்வு முன்பு கோரிக்கையை வைக்க வேண்டும்.
வழக்கு குறித்த கோரிக்கைகளை முன் வைக்க மூத்த வழக்குரைஞர்கள் ஆஜராகக் கூடாது. மூத்த வழக்குரைஞர்களுடன் அதிக நபர்கள் வருவதால் நீதிமன்ற வளாகத்துக்குள் கூச்சல் குழப்பம் நிலவுகிறது என்று கூறியுள்ளார்.